search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பிரச்சினை"

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பழுது அடைந்தது. இதையடுத்து அந்த மேல் நிலை தொட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்) வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எனினும் 6 மாதம் ஆகியும் மேல் நிலை தொட்டி அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோடு பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இருந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி தரவில்லை. எங்கள் பகுதியில் நள்ளிரவில் தான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.

    வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் உடனடியாக இந்த பகுதிக்கு மேல்நிலை தொட்டி அமைத்து தர வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசி உறுதியாக மேல் நிலை தொட்டி அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    எர்ணாவூர் காமராஜ் நகர், பிருந்தாவன்நகர், கன்னிலால் லேஅவுட், காந்திநகர், எர்னீஸ்வரர் நகர், பஜனை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சீரான குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் எர்ணாவூர் முருகன் கோவில் சாலை அருகில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் எண்ணூர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பொன்னேரி அடுத்த மெதூர் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நிரப்பப்படுகிறது. பின்னர் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு இணைப்புகள் மற்றும் தெருக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குடிநீர் வழங்கப்படாததால் பொது மக்கள் 5 கிலோமீட்டர் தூரம் திருப்பாலைவனம் மற்றும் பழவேற்காடு பகுதிக்கு சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் கேன் தண்ணீரை 30 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த இரண்டு வாரமாக குடிநீர் சரியாக வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். வெயிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் குடிக்க முடியாமல் கேன் தண்ணீரை ரூ.30 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. வீட்டு தேவைகளுக்கு சுமார் 5 கிலோமீட்டர் வெளியில் சென்று குடத்தில் தண்ணீர் பிடிக்கிறோம்.

    இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
    • காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.

    மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் ஜெபதாஸ், ஜே. டில்லி பாபு, சர்மிளா, காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதி யூனியனில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
    • யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடந்தது.

    பசும்பொன்

    கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகளை துணிச்சலுடன் தெரிவிக்க லாம். முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.294 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மணிமேகலை (ஆணையாளர்): 100 நாள் வேலை திட்டத்தில அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.

    அன்பரசு (பேரையூர்): வேளாண்மை காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்):- 2.5 ஏக்கரில் நெல் விவசாயம் செய்தேன் களை எடுக்க முடியவில்லை.மணிமேகலை (ஆணை யாளர்):- 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண்மை பணிக்கு பயன்படுத்த ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. பாக்கு வெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • திருமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை நடந்தது.
    • முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சியின் அடிப்படை தேவைகளான சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பது, பாதாள சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண்பது, கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் நகர் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தனர்.

    கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில் திருமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைத்திடவும், கழிவுநீரை அகற்றிட ரூ.64 லட்சம் செலவில் அதிநவீன வாகனம் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • தற்போது குடிநீர் வினியோகம் செய்ய 15 நாள், 20 நாள் ஆகிறது.
    • குடிநீர் பிரச்சினையால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சூயஸ் குடிநீர் திட்டப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினர்.

    கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசியதாவது:-

    மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும்.

    தற்போது குடிநீர் வினியோகம் செய்ய 15 நாள், 20 நாள் ஆகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனது வீட்டுக்கு குடிநீர் வந்து 18 நாட்கள் ஆகிறது.

    வடக்கு மண்டலம் 19-வது வார்டில் வாரம் ஒரு முறை குடிநீர் வருகிறது. அங்கு வரும் போது, மற்ற வார்டுகளில் ஏன் வினியோகம் செய்ய முடியவில்லை. இது மிகவும் கவலை தரும் விஷயமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன், உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவித்த முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×